மழை – காதல்
அவள் முகம் பார்த்ததும்
மின்னல் வெட்டி
புகைப்படம் எடுத்தது மழை !
நீ கதவை அடைத்து விட்டதால்
ஏக்கத்துடன் எட்டிப் பார்க்கிறது
ஜன்னலில் சாரல் !
அவளது தாவணிக்குளிரில்
நனைந்துவிட்டு, இப்படி
நடுங்குகிறதே மழை !
கருமேகக் கூந்தல்
மின்னும் கண்கள் கொண்டு
குளிர்மழையாய் வருகிறாள் என்னவள் !
சிறு தூறல் கூட
அடைமழையாகி விடுகிறது
நீ நனைவதாய் இருந்தால் !
-மு.குருநாதன்
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
Test Message Added.
Post a Comment